Friday, May 11, 2012

கார குழம்பு - KAARA KUZHAMBU



தேவையான பொருட்கள் :

வெங்காயம்          - 1  பெரியது 
தக்காளி                  - 1  
பூண்டு                     -  10 பல் 
புளி                          - பெரிய எலுமிச்சை அளவு 
மிளகாய் தூள்   - 1 டேபிள்ஸ்பூன் 
மல்லித் தூள்   - 2 டேபிள்ஸ்பூன் 
மஞ்சள் தூள்   - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள்   - 1 டீஸ்பூன் 
உப்பு           - தேவையான அளவு 
வெந்தயம்      - 1 டேபிள்டீஸ்பூன் 
கறிவேப்பிலை  - 2 இனுக்கு 
எண்ணெய்               - தாளிக்க தேவையான அளவு 
நல்லெண்ணெய்  - 3 டேபிள்ஸ்பூன் 

செய்முறை :

வீட்டில் காய்கள் எதுவும் இல்லை என்றால் கவலை வேண்டாம் உடனே ஈசியான கார குழம்பு  வைத்துவிடலாம் .  வாங்க வைக்கும் முறை பற்றி பார்ப்போம் .

        முதலில் புளியை தண்ணீரில் உறவைத்து புளிக்கரைச்சலை தயார் 
செய்யவும் .  வெங்காயம் , தக்காளி , பூண்டு  அனைத்தையும் 
பொடியாக நறுக்கி தனித்தனியாக வைக்கவும். 



        புளிக்கரைச்சலுடன்  மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள்,உப்பு  இவை அனைத்தையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

   பாத்திரத்தில் எண்ணெய்  ஊற்றி சூடான பின் வெந்தயம் போட்டு  ,
பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும் .பின்  வெங்காயம்  சேர்க்கவும் .
வெங்காயம் வதங்கிய பிறகு  கறிவேப்பிலை , தக்காளியை  சேர்த்து  வதக்கவும் .

       அதன் பிறகு புளிக்கரைச்சலை (மசாலாக்கரைச்சல் ) சேர்த்து 
கிண்டிவிட்டு  மூடிவைக்கவும் . நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கொதித்தபின்பு இறக்கிவிடவும் .




       கார குழம்புடன் அப்பளம் , முட்டை , காய் (கோஸ் , புடலங்காய் ) பொறியல்   சேர்த்து  சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் .

       குறிப்பு : கார குழம்பு ரொம்ப தண்ணீயாக போய்விட்டால் கவலை  வேண்டாம்  உடனே சிறிதளவு வறுகடலையை பொடியாக  நுனிக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .
      
          
        






3 comments:

Usha Srikumar said...

paarkave arumayaaga irukku!
naavoorugiradhu!!!!

VijiParthiban said...

மிக்க நன்றி உஷா அக்கா .

kalyaan kumar said...

Super... Itha Panna theriyaamatthaan vandhen.. Thanks akkov😁