Saturday, July 28, 2012

குக்கர் சிக்கன் கிரேவி - COOKER CHICKEN GRAVY

தேவையான பொருட்கள் :


கோழிகறி  - 1/2 கிலோ
வெங்காயம் -3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2  ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, மிளகு - சிறிதளவு
சோம்பு - 1டீஸ்பூன்
இஞ்சி , பூண்டு - நறுக்கியது சிறிது    
கலர் பொடி - சிறிது
பொட்டுகடலை மாவு - 1 டீஸ்பூன்  


செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.







வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடிவில் வகுந்து வைக்கவும். 





பின்னர் குக்கரில் சுத்தம் செய்த சிக்கன் ,  வெங்காயம்,  தக்காளி, பச்சைமிளகாய்,  மிளகாய் பொடி,  மல்லி பொடி,  மஞ்சள் பொடி, இஞ்சிபூண்டு விழுது, சிறிது கருவேப்பிலை,  உப்பு ,  1 ஸ்பூன்  எண்ணெய், மிளகு 10,  (பட்டை, கிராம்பு அரைத்து பொடியாகவும் சேர்க்கலாம்) பட்டை, கிராம்பு சிறிது  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிக்கனுடன் பிரட்டி 5 நிமிடம் ஊறவைக்கவும் .  

அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு பின்னர் குக்கரை நன்றாக மூடி வைக்கவும். குக்கரில்  ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும்.  பின்னர் மூன்று  விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது கறியுடன் மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து  நன்றாக வெந்து இருக்கும் .


பின்னர் கடாயில் எண்ணெய்  ஊற்றி சூடான பிறகு சோம்பு, சிறிது மசாலா பொடி (பட்டை, கிராம்பு) , நறுக்கிய இஞ்சி பூண்டு ஆகியவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 





வதங்கிய பின் குக்கரில் இருக்கும் சிக்கனை அதில் சேர்க்கவும் , அதனுடன் சிறிது கலர் பொடியை சேர்த்து  நன்றாக பிரட்டி விடவும். வெந்த சிக்கனிலும் தண்ணீர் இருக்கும் .( தண்ணீர் நமக்கு தேவைபட்டால் சேர்த்துகொள்ளலாம் .) சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு  அதனுடன்  பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிரட்டிவிடவும் . பின்னர் தண்ணீர் சுண்டியவுடன் மல்லிதழையை தூவி அடுப்பை அணைக்கவும்...




இப்பொழுது குக்கர் சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி,
தோசை  ஆகியவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்... மிகவும் அருமையான சுவைமிகுந்த சிக்கன் கிரேவி ரெடி.

குறிப்பு: கிரேவியாக வேடுமென்றால் இப்படி தண்ணீர் சேர்த்து செய்து கொள்ளலாம் . வறுவலாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் வறுத்து கொள்ளலாம்.சுவையான குக்கர் சிக்கன் வறுவல் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்:  

  •  தூதுவலை இலையைப் பறித்து நன்றாக கழுவி தண்ணீர் வற்றும் வரை உலரவிடுங்கள். பின்னர் அந்த இலையை  எண்ணெய்யில் (அல்லது) நெய்யில் நன்றாக பொரித்து தினமும் 10 இலை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, இருமல், ஜலதோஷம்  இருப்பவர்களுக்கு நல்லது.  விரைவில் குணமடையும்.  

பழமொழி:

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு 


உயர உயரப்  பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.


பதினாறும் பெற்றுப்  பெருவாழ்வு வாழ்க.

Monday, July 9, 2012

நெல்லிக்காய் மோர்குழம்பு - (GOOSEBERRY) NELLIKKAI MORE KUZHAMBU




தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 4
பச்சை மிளகாய் - 5
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1/2 மூடி
கடுகு - 1 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 

செய்முறை :

மிக எளிய முறை சத்துமிகுந்த நெல்லிக்காய் மோர் குழம்பு பற்றி பார்ப்போம் 


தேங்காயை துருவி கொண்டு , நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கி எடுக்கவும் .




 
                   முதலில் தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், நறுக்கிய நெல்லிக்காய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்கவும்.




                  தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிவைக்கவும் . அதனுடன்  அரைத்த நெல்லிக்காய் தேங்காய் விழுதை சேர்த்து குழம்பு பக்குவத்திற்கு எடுத்துக்கொள்ளவும். 

                  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு போடவும். பொரிந்ததும் மோர் மிளகாய் போட்டு , கறிவேப்பிலை சேர்த்து அதனுடன்   சிறிது பெருங்காய பொடி சேர்க்கவும். 

     பின் அதனுடன் ரெடியாக இருக்கும் நெல்லிக்காய் மோர் கரைசலை சேர்க்கவும். பின்பு அது நுரைத்து வரும்போதே இறக்கிவிடலாம் .
அதன்மேல் சிறிது கொத்தமல்லி தழையை போட்டு மூடிவிடவும்.
நெல்லிக்காய் மோர்குழம்பு ரெடி....


 

மோர்குழம்புடன்  உருளைக்கிளங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.....

குறிப்பு : 

மோர் குழம்பை கொதிக்கவிட வேண்டியது இல்லை .

மருத்துவ பயன்கள் : 


  • நெல்லிக்காயில் குளிர்ச்சி தன்மை உள்ளது . இது  உடல் வெப்பத்தை குறைக்கும் , முடி வளர்ச்சிக்கு உதவும்.                                                                                               
  •   உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் இதனை  ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
  • அஜீரண கோளாறு, மயக்கம், வாந்தி போன்றவைகளுக்கு நெல்லிக்காய்  மற்றும் மோர் உகந்தது குளிர்ச்சியானது . 
  • வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய், மோர்  இரண்டும் ஒரு நல்ல மருந்துகள்   என்று சொல்லலாம்.
  • ரத்த சோகைக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து.   
  •  கால்சியம் சத்து நிறைய  நெல்லிக்காயில் இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.        


  • நெல்லிக்காய் பல நோய்களையும் கட்டுபடுத்தும் குறிப்பாக மஞ்சள்காமாலை, நீரிழிவு .




Monday, July 2, 2012

முதல் விருது - FIRST AWARD


மகிழ்ச்சி செய்தி
எனக்கு கிடைத்த முதல் விருது  " AWESOME BLOGGER AWARD ".  இவ்விருதால்  நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்க்கு காரணம் என் அருமை உஷா  அக்கா அவர்கள் . எனக்கு விருது கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய அக்கா அவர்களுக்கு நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

உஷா ஸ்ரீகுமார் " http://ushasrikumar.blogspot.in/ " அக்கா நன்றி! நன்றி!!






நான் இவ்விருதை என்னுடைய உறவினர்கள்  உங்களுக்கு வழங்குகிறேன் .


1. இராஜராஜேஸ்வரி அக்கா http://jaghamani.blogspot.in/

2. நிரஞ்சனா http://nirusdreams.blogspot.com/

3. ஆசியா அக்கா http://www.asiyaomar.blogspot.in/

4. வை . கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்  http://gopu1949.blogspot.in/

5. ராதா ராணி அக்கா http://radhaskitchen-1.blogspot.in/




 இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்