Friday, April 27, 2012

பீட்ருட் பொரியல் - BEET ROOT PORIYAL

தேவையான பொருட்கள் :

பீட்ருட்                      - 200 கிராம்
வெங்காயம்           - 1 
கடலைபருப்பு       - 2 டேபிள்ஸ்பூன் 
பச்சமிளகாய்         - 3 
கடுகு                         - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை     - சிறிது 
உப்பு                          -  தேவையான அளவு  
எண்ணெய்             -  தாளிக்க தேவையான அளவு  
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை : 

                     முதலில் பீட்ருட் தோல்நீக்கி கழுவி பொடியாக நறுக்கவும், வெங்காயத்தையும் அதே சைசில்  நறுக்கிகொள்ளவும், பச்சமிளகாயை நடுவில் கீறிகொள்ளவும்.  மேலே குறிப்பிட்ட பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும் .


                  பின்பு  கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் ,பச்சமிளகாய் போடவும் பின் வெங்காயத்தை சேர்த்து சிறிதுநேரம் வதக்கவும் அதனுடன் கடலைபருப்பையும் , கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்.

                 வதங்கிய பின்பு பீட்ருட்டை சேர்த்து பிரட்டிவிடவும் .அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவிடவும்.
சிறிதுநேரத்திற்கு பிறகு ஒரு பிரட்டு பிரட்டி விட்டு தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டி இறக்கவும். பீட்ருட் பொரியல் ரெடி.

   பீட்ருட் பொரியல் 


                தேங்காய் துருவல் தேவைபட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். நான் தேங்காய் துருவல் சேர்க்கவில்லை.










இனிப்பு மாங்காய் பச்சடி - SWEET MANGO PACHADI

தேவையான பொருட்கள் :

மாங்காய்                - 1 
வெல்லம்                - 1/2 அச்சு ( ஜீனி )
மிளகாய் தூள்       - 1/2 டேபிள்ஸ்பூன் 
கடுகு                        - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு  - 1 டீஸ்பூன் 
உப்பு                          -  தேவையான அளவு    
கறிவேப்பிலை    -   1 இனுக்கு  
எண்ணெய்            -  2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை : 

                மாங்காயை  கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு செதுக்கி (சீவி)கொள்ளவும் .  



              முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உ .பருப்பு போட்டு அது வெடித்த பிறகு கறிவேப்பிலையை போடவும் . பின்பு செதுக்கிய மாங்காவை சேர்த்து அதனுடன் வெல்லம், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிவிடவும். சிறிது நேரத்திற்கு பிறகு மூடியை எடுத்துவிட்டு லேசாக பிரட்டிவிட்டு மூடவும். அது கொஞ்சம் கெட்டியானபின் அடுப்பை அணைக்கவும்.

      பொதுவாக மாங்காய் மிகவும் வேகமாக வெந்துவிடும் அதனால் உங்களுக்கு ஏற்றபடி வேகவைத்துக்கொள்ளலாம். அதேபோன்று இனிப்பும் தேவையான அளவு போடலாம். 




      இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.இனிப்பு மாங்காய் பச்சடி ரெடி.

     

Monday, April 23, 2012

இறால் வாழைக்காய் வறுவல் - PRAWNS PLANTAIN FRY



இறால் வாழைக்காய் வறுவல் - PRAWNS PLANTAIN FRY  

தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ 
வாழைக்காய் - 1 
வெங்காயம் - 1 
தக்காளி - 1 
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
பட்டசோம்பு - சிறிதளவு 
எலுமிச்சை - சிறிதளவு 

செய்முறை:



         முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதனுடன் மிளகாய் தூள், சோம்பு தூள், சீராகத் தூள், 
மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைசாறு சிறிது சேர்த்து நன்றாக 
பிசைந்து குறைந்தது அரை மணி நேரமாவது வைக்கவேண்டும். 

         அந்த நேரத்தில் நீங்கள் வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிகொள்ளவும். வாழைக்காயை  ( நீங்கள் விரும்பிய வடிவத்தில் வட்டமாக, சதுர துண்டுகளாக ) நறுக்கிகொள்ளவும்


         இஞ்சி பூண்டு விழுது தயார் செய்துகொள்ளுங்கள், கொத்தமல்லிதழை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.



         கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானபின் பட்டசோம்பையை போடவும்  ( சோம்பு கொஞ்சம் கூடவே போடலாம் ), பின் நறுக்கிய வெங்காயத்தை போடவும், சிறிதுநேரம் வதங்கியபின் கறிவேப்பிலை,  இஞ்சி பூண்டு விழுதை போட்டபின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

       நன்று  வதங்கியபின் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து நன்றாக பிரட்டி சிறிது நேரம் மூடி வைக்கவும். வாழைக்காய் சற்று வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்பு சரிபார்த்து மூடிவிடவும். சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிடவும் ( தண்ணீர் சுண்டும் வரை ). தேவைபட்டால் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பிரட்டிவிடவும். பின்பு மல்லிதழையை தூவி
இறக்கிவிடவும்.  இறால் வாழைக்காய் வறுவல் ரெடி.  
  
                
    குறிப்பு :  இறால் வாழைக்காய் கிரேவி வேண்டுமென்று நினைத்தால் இதனுடன் கொஞ்சம் தேங்காய் சோம்பு  அரைத்து சேர்த்து, சிறிது  தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். இறால் வாழைக்காய் கிரேவி  ரெடி.

Thursday, April 19, 2012

பருப்பு ரசம் - PARUPPU (DAL) RASAM

பருப்பு ரசம்-BENGAL GRAM RASAM 

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு                                       -    அரை கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம்                             -     10 
புளி                                                          -    சிறிய எலுமிச்சை அளவு 
காய்ந்த மிளகாய்                               -     1
வெந்தயம்                                            -     1 டீஸ்பூன் 
எண்ணெய்                                          -      2  டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி , உப்பு             -     தேவையான அளவு
கருவேப்பிலை, மல்லி தலை       -     சிறிது     


செய்முறை :  

             முதலில் புளியை உறவைக்கவும் . வெங்காயத்தை  பொடியாக 
நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு புளிக்கரைச்சலை  வடித்து எடுத்துக்கொள்ளவும். 


              கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு வெந்தயத்தை போட்டு கலர் மாறும் போது மிளகாய் வற்றல் போடவும் ,பின்பு  வெங்காயம் சேர்த்து வதக்கவும் , பின் கடலை பருப்பு  போட்டு நன்றாக வதக்கவும் . அதனுடன் கருவேப்பிலை போடவும் , சிறிது பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும் . 


             பின்பு கரைத்தெடுத்த புளிக்கரைச்சலை ஊற்றவும். ரசம் கொதிப்பதற்கு முன்பு வெண்ணிற கொதிவரும் பொழுது இறக்கிவிடவும். பின் நறுக்கிய மல்லி தலையை துவவும். சிறிது நேரம் மூடி வைத்து பின்பு எடுத்து பரிமாறவும்.    கடலைபருப்பு ரசம் ரெடி.


           

                ரசம் சாதத்துடன்  அப்பளம் பொரித்தெடுத்து  சாப்பிட்டால் ரொம்ப  நன்றாக இருக்கும் .


 

                            


Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 




என்  இனிய  தமிழ்  மக்களுக்கு  என்னுடைய 

புத்தாண்டு  வாழ்த்துக்கள் .

Friday, April 6, 2012

பாகற்காய் சம்பல் - Bitter Gourd Sambol

பாகற்காய்  சம்பல் 

தேவையான  பொருட்கள் :
                     
                                 பாகற்காய்                      :    2 
                                 தக்காளி                           :    1 
                                வெங்காயம்                   :    1  
                                மிளகு தூள்                     :   அரை  டீஸ்பூன் 
                                உப்பு                                   :   தேவையான அளவு 
                                எண்ணெய்                      :   5 டேபிள் ஸ்பூன் 
                                மல்லி இலை                :   சிறிது 
                                எலுமிச்சை பழம்        :   அரை 
செய்முறை :
                 
                    முதலில்  பாகற்காயை  தண்ணீரில் கழுவி  வட்ட வட்டமாக நறுக்கிகொள்ளவும் . அதை  சிறிது  நேரம்  உலரவைக்கவும் . 
           பின்னர்    தக்காளியையும் , வெங்காயத்தையும்  சிறிது -சிறிதாக  (பொடிதாக) நறுக்கி வைத்துக்கொள்ளவும் . 



          கடாயில்  எண்ணெய்  விட்டு  காய்ந்ததும்  நறுக்கிய  பகாற்காயை  போட்டு பொரித்தெடுக்கவும் . அதை ஒருபாத்திரத்தில்  எடுத்து அதனுடன்  நறுக்கிய வெங்காயம் , தக்காளி  , உப்பு  தேவையான அளவு , மிளகு தூள்  அனைத்தையும்  போட்டு  நன்றாக  குலுக்கிவிடவும்  , பின்னர்   மல்லி இலையை   பொடிதாக  வெட்டி  அதன்  மேல்   தூவவும்  , எலுமிச்சை  சாறு  நான்கு  சொட்டு  விட்டு  சிறிது நேரம் கழித்து  எடுத்து  சாப்பிடலாம் .

                  தயிர்  சாதம், சாம்பார் சாதத்துடன்  சேர்த்து சாப்பிடுவதற்கு  பாகற்காய்  மிக  அருமையாக  இருக்கும் .  

குறிப்பு : பாகற்காய்  உடலுக்கு  ரொம்ப  நல்லது , இரத்தத்தை  சுத்தப்படுத்தும்  அதிலும்  சர்க்கரை  ( Diabetes )நோயாளிகளுக்கு  மிகவும் நல்லது .